Saturday, June 27, 2009

எனக்காக!


நான் நினைப்பதை நான் நினைக்குமுன்

நீ நினைத்துவிட்டாய்... எனக்காக!

நான் ரசிப்பதை நான் ரசிக்குமுன்

நீ ரசித்து வைத்தாய்.. எனக்காக!

நான் கலங்குமுன் என் விழிகளில்

நீ நீர் துடைத்தாய்... எனக்காக!

நான் அழுகையில் உன் மடியினில்

நீ சேர்த்தணைத்தாய் ....எனக்காக!

நான் உறங்கையில் என் கனவினில்

நீ இடம் பிடித்தாய்... எனக்காக!

நான் சிரிக்கையில் என் சிரிப்புக்கு

நீ விதை விதைத்தாய் ... எனக்காக!
நான் நினைக்கையில் என் கனவுக்கு

நீ உரு கொடுத்தாய்... எனக்காக!

நான் மறக்கையில் என் உணர்வுகள்

நீ புரிந்திருந்தாய் ...எனக்காக!
நான் பேசையில் என் பேசினில்

நீ மயங்கி நின்றாய்.. எனக்காக!

என் உணர்வினில் என் உயிரினில்

நீ கலந்திருந்தாய்... எனக்காக!
என் மூச்சிருக்கும் வரை நேசித்து

வாழ்ந்திருப்பேன் நான்... உனக்காக!






1 comment:

  1. அருமையான கவிதை நடை!
    தெடர்ந்து படிக்கிறேன்...
    நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete