Wednesday, June 17, 2009

பலருள் சிலர்... - கவிதை

மூன்றுக்கு நான்கு வேளை

மூச்சு முட்ட சாப்பிட்டு

பட்டினி பற்றி பகிரங்கமாக

பிரசங்கம் பண்ணும் சிலர்....

அன்பென்றால் என்ன விலை

அரை கிலோ என்று கேட்டு

அண்டத்தில் அன்பில்லை என

ஆவேசப்படும் சிலர்...

என் வீட்டு நாய் குட்டிக்கு

எட்டு நாளாய் அஜீரணம் என்றுவிட்டு

எதிர் வீட்டு மழலை துளி பாலுக்கு அழுவதை

எட்டி நின்று பார்த்து மறக்கும் சிலர்...

அருகிலிருக்கும் மனதின் தேவை

அன்பென்று அறியாமல்
ஆசியா கண்டத்தின்

அமைதியை தேடும் சிலர்....

பல கோடி மாந்தருக்குள்

பல்கி பெருகிய இவர் போல்

வாழ்ந்திருந்த சுவடே இன்றி நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ??




1 comment:

  1. அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

    உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

    அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

    ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

    - வம்பு விஜய்

    ReplyDelete