உக்காந்து இருந்து யோசிச்துலே தோணினது...
ஒரு நலல நண்பன்......
-மௌனத்தையும் மொழி பெயர்ப்பான்.
-துன்பத்தில் தோள் கொடுப்பான்...
துணிந்து நின்று உயிர் கொடுப்பான்...
தட்டு தடுமாறி, விழி பிதுங்கி, பயந்து கட்டுண்டு இருக்கும்போது
தழுவி துணிச்சல் தந்து வீறு கொண்டு எழ செய்வான் ....
அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எவனெவன் என்னென்ன சொன்னாலும் ...
உன்னை எனக்கும் என்னை உனக்கும் தெரியும் என்பான்...
கோபங்கள்... பேதங்கள்... வாக்குகள்... வாதங்கள்....
தருவது தெளிவு தானே தவிர பிரிவு இல்லை...
நல்ல நண்பனால் இதயத்தை உடைக்க முடிந்தாலும்...
நட்பை உடைக்க முடியாது...